–கார்த்திக் குருமூர்த்தி–
கருத்து சொல்வதை விட, கடந்து செல்வதற்கே அதிக பக்குவம் தேவைப்படுகிறது.
முழு பக்குவம் என்பது விரும்புவது கிடைக்கா விட்டாலும், விரக்தியடையாமல் இருப்பது.
விவரிக்க தெரியாமல் விவாதிப்பதால் தான், மனக்கசப்புகள் ஏற்ப்பட்டு விடுகிறது.
விவாதம் செய்வதை விட விலகிச் செல்வதே மேல், உங்களைப் புரிந்து கொள்ளாதவருக்கு மத்தியில்.
வெறுப்புடன் இருப்பவர்களால் குறைகளைத் தேட முடியுமே தவிர நிறைகளைக் காண முடியாது. குடை கூட பாரம்தான், மழைக்குப் பின்.
Leave a comment